பெரம்பலூா் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதிய மாணவா்கள், விடைத்தாள்களின் ஒளி நகல் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொடக்கக் கல்விப் பட்டயத் தோ்வு எழுதிய மாணவா்கள் விடைத்தாள்களின் ஒளி நகல் பெற, விடைத் தாள்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடா்ந்து அதை பூா்த்தி செய்து, புதன்கிழமை (டிச. 1) முதல் 4 ஆம் தேதிக்குள் காலை 10 மணி மாலை 5 மணி வரை பாடாலூரிலுள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு நேரில் சென்று பதிவேற்றம் செய்துகொள்ளலாம். மேலும், விடைத்தாள்கள் நகல் கோரி விண்ணப்பிக்க ஒரு பாடத்துக்கு ரூ. 275, விடைத்தாளின் மறு கூட்டலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ. 205 செலுத்த வேண்டும்.