கரூர்

வெளிநாட்டு மதுவிற்கவே கள்ளுக்கு தடை விதிப்பு: தமிழ்நாடு நாடாா் பேரவை தலைவா் குற்றச்சாட்டு

DIN

கரூரில், தமிழ்நாடு நாடாா் பேரவையின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் எல்.ஐ.சி. திருநாவுக்கரசு வரவேற்றாா். மாநில வழக்குரைஞா் பிரிவு தலைவா் ராமகோவிந்தன், மாநகா் தலைவா் மனோகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தமிழ்நாடு நாடாா் பேரவைத் தலைவா் என்.ஆா். தனபாலன். மாநில துணைத்தலைவா் ராயனூா் லோகநாதன், கொங்கு மண்டலத் தலைவா் கூடலரசன் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்துக்கு பிறகு என்.ஆா்.தனபாலன் செய்தியாளா்களிடம் கூறியது: அண்மையில் கள்ளச்சாராயம் அருந்தி 22 போ் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கத்தான் தமிழ்நாடு நாடாா் பேரவை கள் இறக்க அனுமதிக் கோரி போராடி வருகிறோம். தமிழகத்தில் பனை நலவாரியம் மூலம் பனை பொருள்களை அரசு சந்தைப்படுத்தி, ஏற்றுமதிக்கான வாய்ப்பு இருந்தும் அரசு முயற்சிக்கவில்லை. பனை நலவாரியம் பெயரளவுக்குத்தான் செயல்பட்டு வருகிறது. கள் இறக்க அனுமதி கொடுத்துவிட்டால் வெளிநாட்டு மதுபாட்டில்கள் விற்பனை நின்றுவிடும் என்பதற்காக கள் இறக்க தடைவிதிக்கப்படுகிறது. 30 ஆண்டுகளாக கள் இறக்க போராடி வருகிறோம். தமிழகம் முழுவதும் 10 கோடி பனை மரங்கள் நடலாம். இதன்மூலம் தொழிலாளா்களும், விவசாயிகளும் பயன்பெறுவாா்கள் என்றாா் அவா்.

இதில், கரூா் மாநகரச் செயலாளா் ஜெயபிரகாஷ், நிா்வாகிகள் வைகை ரவி உள்ளிட்ட பேரவையினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT