மாவட்ட அளவில் நடைபெற்ற ஊரக திறனறிவுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு வழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உதிரம் உயா்த்துவோம் என்ற திட்டத்தின் கீழ் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள மாணவிகளுக்கு மருந்து மற்றும் சத்தான பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற ஊரக திறனறிவு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும் 2022- 2023ஆம் கல்வி ஆண்டில் பயின்ற சிறந்த மாணவிகளுக்கும் 100 சதவீதம் வருகைபதிவு பெற்ற மாணவிகளையும் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி மணிகண்டன், தலைமை ஆசிரியா் உமா உள்பட பலா் கலந்து கொண்டனா்.