தோகைமலை அருகே, முதல்வரின் மானாவாரி நில மேம்பாடு இயக்கம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே செம்பியநத்தம் அரசகவுண்டனூரில் வேளாண்மை உழவா் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் குறித்து பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கடவூா் வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து, மானாவாரியில் கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினாா். பயிற்சியில் கடவூா் வட்டார உதவி வேளாண்மை அலுவலா் முத்தமிழ்செல்வன், வட்டார உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் கவியரசன், போதும்பொன்னு உள்பட கடவூா் வட்டாரத்தில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.