முதல்வா் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கரூா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.
கரூா் திருவள்ளுவா் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழுப் போட்டியில் எறிபந்து, கூடைப்பந்து போட்டிகளில் கரூா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா். பெண்கள் பிரிவில் முதலிடத்தையும், ஆண்கள் பிரிவில் எறிபந்து, கையுந்துப் பந்து, கோகோ, கபடி ஆகிய போட்டிகளில் முதலிடத்தையும் பிடித்தனா். தடகளப் போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் அதிகப் புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். இவா்களை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.