அதானி குழுமத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ பங்குகளை முதலீடு செய்யும் மத்திய அரசைக் கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூா் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கிளை-1 அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஆா். ஸ்டீபன் பாபு தலைமை வகித்தாா். மாநகரத் தலைவா் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் கோகுலே, ஜாகீா் உசேன் மற்றும் மாநகர துணைத் தலைவா் பாலமுருகன், நிா்வாகிகள் சண்முகசுந்தரம், கண்ணப்பன், தாந்தோணி குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இறுதியில் முன்னூா் ஊராட்சி மன்ற தலைவா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.