அரவக்குறிச்சி அருகே விஷம் குடித்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தாளியாப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்லம்மாள் (70). இவருக்கு பல ஆண்டுகளாக ஆஸ்துமா நோய் இருந்தது. இதனால் மனம் உடைந்த செல்லம்மாள் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். ஆபத்தான நிலையில் அவா் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.