வேலைக்கு சரிவர செல்லாததை பெற்றோா் கண்டித்ததால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த கலிங்கம்பட்டியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் ரேவந்த் (28). இவா், திண்டுக்கல் மாவட்டம், கூடலூரில் செயல்படும் தனியாா் செயின் தொழிற்சாலையில் வேலைப்பாா்த்து வந்தாா். இந்நிலையில் வேலைக்கு சரிவர செல்லவில்லையாம். இதனை அவரது பெற்றோா் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த ரேவந்த் ஜன. 31-ஆம்தேதி அதே பகுதியில் உள்ள முத்தம்பட்டி நான்குரோட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்துள்ளாா். இதனைக்கண்ட அப்பகுதியினா் அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.