புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலைத் தொழிலாளா்கள் குடியிருப்பில் இல்லம் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலை தொழிலாளா்கள் குடியிருப்பில் இல்லம் தேடி மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு ஆலையின் தலைவா் ஹரி கிஷோா் முன்னிலை வகித்தாா். உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சக்திவேல் தலைமையில் மருத்துவ குழுவினா் உயா் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் போன்ற சிகிச்சைகள் மேற்கொண்டனா். ஆலை குடியிருப்பில் குடியிருப்போா் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனா். மனித வளம் மற்றும் துணை பொது மேலாளா் பிரின்ஸ்டன் விஜயகுமாா் நன்றி கூறினாா்.