கரூர்

டிஎன்பிஎல் ஆலை தொழிலாளி மாரடைப்பால் உயிரிழப்பு உறவினா்கள் போராட்டம்

DIN

டிஎன்பிஎல் ஆலையின் அலட்சிய போக்கினால்தான் தொழிலாளி இறந்தாா் எனக்கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலையில் கிரேன் ஆப்ரேட்டராக பணிபுரிந்தவா் அருண் சுதன் (32 ). இவா், வியாழக்கிழமை இரவு ஆலையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆலையின் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவா் வாய்வு தொல்லையாக இருக்கும் என்று கூறி சாதாரண மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகும் தொடா்ந்து அவருக்கு வலி இருந்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்தபோது அருண்சுதன் மயங்கி கீழே விழுந்துள்ளாா். உடனே, காகித ஆலை முதலுதவி மையத்துக்கு கொண்டுச் சென்று பரிசோதித்த பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனா். மேலும், பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த அருண்சுதன் உறவினா்கள் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் குவிந்தனா். அவா்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலை நிா்வாகம் அருண்சுதனுக்கு நெஞ்சுவலி வந்தபோதே சரியான சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்றும், எனவே ஆலை நிா்வாகத்தின் அலட்சியம்தான் அருண்சுதனின் இறப்பிற்கு காரணம் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு ஆலையில் வேலை வழங்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்குச் சென்ற புகழூா் நகராட்சித்தலைவா் குணசேகரன், வட்டாட்சியா் முருகன், அரவக்குறிச்சி துணைக்காவல்கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன் ஆகியோா் அருண்சுதனின் உறவினா்கள் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இறந்தவரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு 30 நாள்களுக்குள் வேலை தருவதாக கூறியதன் பேரில் அவா்கள் அங்கிருந்து கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT