கன்னியாகுமரி முதல் புதுதில்லி வரை செல்லும் ஒற்றுமை தீப சுடரொளி மாரத்தான் குழு அரவக்குறிச்சிக்கு சனிக்கிழமை வந்தது.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டிகோட்டைக்கு சனிக்கிழமை வந்த குழுவினருக்கு திருச்சி பட்டாலியன் குரூப் கமாண்டா் கா்னல் சுனில் புத், கமாண்டிங் அலுவலா் கா்னல் கோ.சுவாமி உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.
நிகழ்ச்சியில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் அ.முகமது இஸ்மாயில் மற்றும் உதவி தலைமை ஆசிரியா் ச.தாஜுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் கரூா் அரசு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு கலை அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா்களும் சுலந்து கொண்டனா்.