கரூர்

இலவச மின் இணைப்பு:கரூா் மாவட்டத்தில்3,368 போ் பயன்

DIN

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் 3,368 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாய தொழிலை மேம்படுத்த, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் மொத்தம் 2,807 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,474 ஏக்கா் விலை நிலங்கள் பயனடைந்துள்ளது. நிகழாண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 561 பேருக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT