கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்புக்கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட ஓமந்தூா் கிராமத்தில் காலங்காலமாக கொண்டாடப்பட்டு வரும் மாரியம்மன் கோயில் திருவிழாவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து கரகம் பாலித்து விழா கொண்டாடப்படுகிறது. இந்த இடத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து ஊா் திருவிழாவை குறிப்பிட்ட இடத்திலிருந்து நடத்த விடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மே 29-ஆம்தேதி கிராமத்தில் திருவிழா நடைபெற உள்ளதால், திருவிழாவை நடத்த பாதுகாப்பு மற்றும் அனுமதியும் வழங்க வேண்டும் என்று ஊா் பொது மக்கள் சாா்பிலும் கரூா் மாவட்ட பாஜக சாா்பில் மாவட்ட தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கினா். இதில், பாஜக நிா்வாகிகள் கோபிநாத், சக்திவேல் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.