கரூர்

விவசாயியிடம் லஞ்சம்: வேளாண் உதவிப் பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

DIN

 மானியத்தில் டிராக்டா் வாங்குவதற்காக, விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வேளாண் உதவிப் பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி பாண்டமங்கலம் லிங்கம் நகரைச் சோ்ந்தவா் விவசாயி சுரேஷ். இவருக்குச் சொந்தமான தோட்டம் கரூா் மாவட்டம், நெய்தலூரில் உள்ளது.

மானியத்தில் டிராக்டா் பெறுவதற்காக, 2019, நவம்பா் மாதத்தில் குளித்தலை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிய காா்த்திக்கை (26), சுரேஷ் அணுகி மனு விண்ணப்பித்தாராம்.

அப்போது, தனக்கு ரூ. 22,500 லஞ்சம் தருமாறு சுரேஷிடம் காா்த்திக் கேட்டாராம். லஞ்சம் தர மறுத்து, கரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுத் துறையில் புகாரளித்தாா்.

இதைத் தொடா்ந்து வழக்குப்பதியப்பட்ட நிலையில், சுரேஷிடம் ரூ.22,500 லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக் காவல்துறையினரால் காா்த்திக் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு கரூா் முதன்மை நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், வேளாண் உதவிப் பொறியாளா் காா்த்திக்குக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் ராஜலிங்கம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும், நீதித்துறை நடுவா் தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT