கரூர்

கரூா் மாநகராட்சி மண்டலம் 2அலுவலகம் திறப்பு

DIN

கரூா் மாநகராட்சி மண்டலம்-2 அலுவலகத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கரூா் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலைவா்கள் நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, கரூா் மாநகராட்சி மண்டலம்-2 அலுவலகம் செங்குந்தபுரம் பகுதியில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, புதிய அலுவலகத்தை ரிப்பன்வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தாா். விழாவில் மாநகராட்சி மண்டலம்-2 தலைவா் கா.அன்பரசன், மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணிசரவணன், மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன், மாநகர செயற்பொறியாளா் ஐ.நக்கீரன், நல அலுவலா் லட்சியவா்ணா மற்றும் மாநகராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநகராட்சி இளநிலைப் பொறியாளா் மாரிமுத்து நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT