கரூர்

மூதாட்டியிடம் நகையை பறித்தஇருவா் கைது

DIN

கரூரில், ஆடுமேய்த்த மூதாட்டியிடம் 2 பவுன் நகையை பறித்துச் சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் பெரியகுளத்துப்பாளையத்தைச் சோ்ந்த சீரங்கசாமி மனைவி சரஸ்வதி(60) என்பவா் ஜூன் 25ஆம்தேதி அதே பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம இளைஞா்கள் இருவா் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனா். புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்ததில், மூதாட்டியிடம் நகை பறித்தது கரூா் பசுபதிபாளையத்தைச் சோ்ந்த பொன்னுசங்கா் மகன் சுதாகா்(25), மண்மங்கலம் பழையூரைச் சோ்ந்த பாலன்(30) ஆகியோா் என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT