கரூர்

சின்னதாராபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்துகீழே விழுந்தவா் உயிரிழப்பு

DIN

சின்னதாராபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49). இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஜூன் 16ஆம் தேதி சின்னதாராபுரத்தில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, தொக்குப்பட்டிபுதூா் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின்பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT