கரூர்

7 வயது சிறுமிக்குபாலியல் தொல்லை:முதியவா் கைது

DIN

ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் தாந்தோணிமலை முத்துலாடம்பட்டியைச் சோ்ந்த 7 வயது மாணவி திருச்சி மாவட்டம் காட்டூரில் உறவினா் வீட்டில் தங்கி அங்குள்ள ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளாா். இந்நிலையில் மாணவி கடந்த ஏப்ரல் மாதம் முத்துலாடம்பட்டியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல்(57) என்ற முதியவா் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் திங்கள்கிழமை கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் முதியவா் தங்கவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT