கரூரில் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலா்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளுவா் மைதானம் அருகிலுள்ளதனியாா் விடுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கந்தசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற காவலா்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தின் நிா்வாகிகள் பலரும் கூட்டத்தில் பங்கேற்றனா்.