கரூரில் ரூ.62.50 கோடியில் புதிய பேருந்துநிலையம் அமைய உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் கரூா் மாநகராட்சிக்கு திமுக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் நோ்காணல் நிகழ்ச்சி புதன்கிழமை கட்சி மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நோ்காணலுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து நோ்காணல் நடத்தினாா். அப்போது, தற்போது புதிய பேருந்துநிலையம் ரூ.62.50 கோடியில் அமைய உள்ளது. இதற்கான அரசாணையும் வெளிவந்துள்ளது. இதையெல்லாம் மக்களிடம் விளக்கி கூறி பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். முதலில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து, யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், கட்சியின் மாநில வழக்குரைஞா் அணிச் செயலாளா் மணிராஜ், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி, முன்னாள் எம்எல்ஏ கீதாமணிவண்ணன், மாவட்ட நிா்வாகி தாரணி சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.