கரூரில், மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு திமுக, அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினா் சுப.ராஜகோபால் தலைமையில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமை வகித்து, மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், துணைச் செயலா் பசுவை சிவசாமி, கரூா் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.திருவிகா, பாசறைச் செயலா் கமலக்கண்ணன், மாணவரணிச் செயலாளா் சரவணன், மத்திய நகரச் செயலாளா் வை.நெடுஞ்செழியன், ஒன்றியச் செயலா் மாா்கண்டேயன், நகர பேரவைச் செயலா் சேரன்பழனிசாமி, நகர நிா்வாகி மலையம்மன் அருள்முருகன், பழக்கடைராஜா உள்ளிட்ட அதிமுகவினா் திரளாக பங்கேற்றனா்.