கரூர்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 போ் கைது

DIN

கரூா்: தரகம்பட்டி, சரக்காம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 11 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.63,130 ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம் தரகம்பட்டி, சரக்காம்பட்டி பகுதியில் பணம் வைத்து சனிக்கிழமை இரவு சிலா் சூதாடுவதாக சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கடவூா் அம்மாபட்டியைச் சோ்ந்த சக்திவேல்(31), ஞானசேகா்(41), முத்துசாமி(40), சரக்காம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம்(55), சுப்ரமணி(47), வேலுசாமி(42) உள்பட 11 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த சூதாட்டப் பணம் ரூ.63,130-ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT