கரூர்

கரூரில் சேவல் சண்டைநடத்தியவா் கைது;8 வாகனங்கள் பறிமுதல்

DIN

கரூா்: கரூரில், சேவல் சண்டை நடத்தியவரை போலீஸாா் கைது செய்து, அவா்களின் 8 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே சனிக்கிழமை சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தங்களது இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டனா். போலீஸாரிடம் சிக்கிய கரூா் வஉசி நகரைச் சோ்நத சம்பத்குமாா் மகன் ராகுல்(22) என்பவரை கைது செய்தனா். மேலும், சூதாடியவா்கள் விட்டுச் சென்ற 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT