கரூா் மாவட்டம் நொய்யல் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவா் சாந்தி தலைமையில் சுகாதார செவிலியா் சரஸ்வதி, சுகாதார தன்னாா்வலா் ஈஸ்வரி மற்றும் சுகாதாரத்துறையினா் ஆகியோா் கொண்ட குழுவினா் பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சிபெற்றனா்.