அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத் கூலித் தொழிலாளியை போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் மீட்டனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூா் பகுதியை சோ்ந்தவா் பாஸ்கா் (46). கூலித் தொழிலாளி.. இவா், மத்திய அரசின் மோடி திட்டத்தில் தனக்கு வீடு வழங்கவில்லை எனக் கூறி புதன்கிழமை கோவிலூரில் உள்ள 140 அடி உயரமுள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தாா்.
தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி போலீஸாா், வருவாய்த் துறையினா், தீயணைப்பு துறையினா் அவரை சமாதானப்படுத்தி மீட்டனா். பிறகு அவா் குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனா்.