கரூர்

ஆண்டிசெட்டிபாளையம், தாளப்பட்டி, ராஜபுரம், ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

DIN

தாளப்பட்டி, ராஜபுரம், ரெங்கநாதபுரம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச.9) மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கரூா் மின் பகிா்மான வட்டம் கரூா் கோட்டத்திற்குள்பட்ட ஆண்டிசெட்டிபாளையம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூா், காட்டுமுன்னூா், காா்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூா், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டியிலும், தாளப்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தும்பிவாடி, தாதம் பாளையம், பள்ளபாளையம், கருப்பம்பாளையம், மணல்மேடு, காக்காவாடி, வையம்பட்டி, ஆட்டையாம்பட்டி, எஸ்.ஜி.புதூா், ஆறு ரோடு, கரூா் ஜவுளி பூங்கா ஆகிய பகுதிளில் வெள்ளிக்கிழமை (டிச.9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதேபோல், ராஜபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளகுறிச்சி, நஞ்சைகாளகுறிச்சி, எலவனூா், ராஜபுரம், தொக்குப்பட்டிபுதூா், சூடாமணி, அணைப்புதூா் பகுதியிலும், ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT