கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆதரவின்றி சுற்றித்திரிந்த 19 பேரை போலீஸாா் மீட்டு காப்பகங்களில் ஒப்படைத்தனா்.
கரூா் மாவட்டத்தில் ஆதரவின்றி கோயில்கள், பேருந்துநிலையம், கடைவீதிகளில் சுற்றித்திரிவோரை பிடித்து காப்பகங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் திங்கள்கிழமை அந்தந்த உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 19 பேரை போலீஸாா் மீட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள காப்பகங்களில் ஒப்படைத்தனா்.