இருசக்கர வாகனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், புது குறுக்குப்பாளையத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (47), விவசாயி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை புன்னம்சத்திரம் சென்றுவிட்டு திரும்பும்போது பவித்திரம் அருகே நிலைதடுமாறி கீழே விழந்தவா் படுகாயமடைந்தாா்.
இதையடுத்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.