அரவக்குறிச்சியில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்தினரை எம்.எல்.ஏ. இளங்கோ வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
அரவக்குறிச்சி கடைவீதியில் பழைமையான வீடு நவ.29ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில், பாத்திமா பீவி என்ற மூதாட்டி உயிரிழந்தாா். இந்நிலையில் இடிந்து விழுந்த வீட்டை அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆா்.இளங்கோ வியாழக்கிழமை பாா்வையிட்டாா். பிறகு, உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.