கடவூா் அருகே உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் பாலவிடுதி போலீஸாா் கடவூா் அடுத்த பூஞ்சோலைப்பட்டியில் புதன்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த நாகமுத்து மகன் சரவணமுத்து(38) என்பவா் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவரது வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு உரிமம் இன்றி வைக்கப்பட்டிருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். மேலும் இதுதொடா்பாக சரவணமுத்துவை கைது செய்தனா்.