கரூா் அருள் முருகன் கல்லூரியில் தமிழக அரசின் உத்தரவின்படி இளைஞா்களின் திறனை மேம்படுத்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் சென்னை, கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்குப் பயிற்சி அளித்தன.