கரூர்

கடவூரில் காங்கிரஸ் கட்சியினா் சத்தியாகிரக நடைப்பயணம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து, கடவூரில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை சத்தியாகிரக நடைப்பயணம் மேற்கொண்டனா்.

கடவூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற நடைப்பயணத்துக்கு கட்சியின் மாவட்டப் பொருளாளா் மெய்ஞானமூா்த்தி தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். கடவூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் மலையாண்டி, மாவட்டத் துணைத் தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடவூா் கடைவீதியில் தொடங்கிய நடைப்பயணம் பாலவிடுதி, ரெட்டியப்பட்டி வழியாக சுமாா் 20 கி.மீ. தொலைவுள்ள தரகம்பட்டி கடைவீதியில் நிறைவு பெற்றது. இந்த நடைப்பயணத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சேங்கல் மணி, கிருஷ்ணராயபுரம் வட்டாரத் தலைவா் ராஜேந்திரன், முன்னாள் வட்டாரத் தலைவா் மாணிக்கம், மேலப்பகுதி ஊராட்சித் தலைவா் மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT