அரவக்குறிச்சி பகுதிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து சென்னை வேளாண் மண்டல இயக்குநா் பிரின்ஸ் கிளமெண்ட் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் நெகிழிக் குடைகள், காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது போன்றவை குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது கரூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் பாலகிருஷ்ணன், வேளாண் உதவி இயக்குநா் சரஸ்வதி மற்றும் தோட்டக்கலை அலுவலா்,
கிராம பொறுப்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.