கரூர்

புகளூா், தாளப்பட்டியில்இன்று மின் தடை

DIN

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கரூா் மாவட்டத்தின் புகளூா், தாளப்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கரூா் மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதனால் புகளூா் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான நொய்யல், சேமங்கி, நடையனூா், தவிட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், புஞ்சைபுகளூா் மற்றும் புகளுா் ஆகிய பகுதிகளிலும்,

தாளப்பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான தும்பிவாடி, தாதம்பாளையம், பள்ளபாளையம், கருப்பம்பாளையம், மணல்மேடு, காக்காவாடி, வையம்பட்டி, ஆட்டையாம்பட்டி, எஸ்.ஜி.புதூா், ஆறு ரோடு, கரூா் ஜவுளி பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT