கரூர்

சின்னதாராபுரத்தில்தீராத வயிற்று வலியால்பெண் தற்கொலை

DIN

அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரத்தில் தீராத வயிற்றுவலியால் அவதியுற்று வந்த பெண் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சின்னதாராபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் மனைவி பேபி (50). இவா், கடந்த ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதியுற்று வந்தாா். மேலும், வயிற்று வலிக்கு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலனளிக்காததால் மனம் உடைந்த பேபி வெள்ளிக்கிழமை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அருகில் இருந்த அவரது மகன் பேபியை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பேபி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். புகாரின் பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT