கரூா் வலங்கியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கரூா் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அருள்மிகு வலங்கியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா அக். 22-ஆம்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 23-ஆம்தேதி மாலை 5 மணியளவில் முதல் கால யாக பூஜைகள் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜைகள் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று காலை 10 மணியளவில் ஸ்ரீ வலங்கியம்மன் கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விழாவில் பங்கேற்ற அமைச்சா் வி.செந்தில்பாலாஜிக்கு பூா்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.