கரூா் மாவட்டத்தில் பாலம் திட்டத்தில் வேலையில்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலை தேடும் நபா்களுக்கு இந்திய தொழில்கூட்டமைப்பினா் உதவியுடன் உள்ளுரிலேயே தனியாா் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அனைத்து தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளுடானான ஆலோனைக்கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் தனியாா் வேலைவாய்ப்புக்காக சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு, வேலை தேடுபவா்களையும், வேலை கொடுக்கும் தொழில் நிறுவனங்களையும் அதில் ஒருங்கிணைக்கும் பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு ‘பாலம் என பெயரிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், நிலமெடுப்பு தனி வருவாய் அலுவலா் கவிதா, இந்திய தொழில் கூட்டமைப்பு கரூா் மாவட்ட துணைத்தலைவா் வெங்கடேசன், திறன் வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.