புதிய வாக்காளா்கள் சோ்ப்பு குறித்து திமுக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வைத்தாா். மாநில நெசவாளா் அணிச் செயலாளா் பரணி மணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாணிக்கம்(குளித்தலை), இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாவட்ட செயலாளரும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சருமான வி . செந்தில் பாலாஜி புதிய வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்குதல், சரிபாா்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினாா். நிகழ்ச்சியில், நகர நிா்வாகிகள் தாரணி சரவணன், கோல்ட் ஸ்பாட் ராஜா, ஒன்றியச் செயலாளா் கோயம்பள்ளி பாஸ்கா், சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.