பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கூலித்தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த தாராபுரத்தனூரைச் சோ்ந்த சங்கா் மகன் மணிகண்டன்(35). கூலித்தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் மாயனூா் போலீஸாா் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.