கரூா்: புலியூா் செட்டிநாடு சிமென்ட் ஆலை சாா்பில், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தின் செயல்பாடு ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்தாா். மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி நிகழ்வில் பங்கேற்று, உற்பத்தி இயந்திரத்தின் செயல்பாட்டைத் தொடக்கி வைத்தாா்.
முன்னதாக செட்டிநாடு சிமென்ட் ஆலைத் தலைவா் ஆா்.பி. முத்தையா வரவேற்றாா். நிகழ்வில் சட்டபபேரவை உறுப்பினா்கள் குளித்தலை இரா. மாணிக்கம், அரவக்குறிச்சி ஆா். இளங்கோ, கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆலையின் மக்கள் தொடா்பு அலுவலா் டி.அடைக்கப்பன் செய்திருந்தாா்.