கரூர்

கல்விச் சுற்றுலா: துபை செல்லும் கரூா் அரசுப் பள்ளி மாணவா்கள்

DIN

கல்வி சுற்றுலாவுக்கு துபைக்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை சாா்பில் கடந்த 8 வாரங்களாக மாநில அளவிலான விநாடி- வினா போட்டி நடைபெற்றது. இதில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தென்னலை பள்ளி மாணவா் திவாகா், கடவூா் பள்ளி மாணவி ரம்யா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து அவா்கள் இருவரும் கல்விச்சுற்றுலாவுக்கு துபை செல்ல தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல சின்னதாராபுரம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கரை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT