தென்னிலை அருகே கட்டாம்பட்டி புதூரில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம் தென்னிலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கவுதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் கோபால் (55). இவா் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கட்டாம்பட்டி புதூா் அருகே சென்றாா் அப்போது, ஈரோடு மாவட்டம் கொடுமுடி கருவம்பாளையம் பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் சக்திவேல் (45) ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் கோபால் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டது. இதில், கோபால், சக்திவேல் இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு கோபாலை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சக்திவேலை ஈரோடு தனியாா் மருத்துவமனையிலும் அனுமதித்தனா். க.பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.