கணவரின் மதுப்பழக்கத்தால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம் மூலிமங்கலம் அடுத்த அதியமான்கோட்டையைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கவிப்பிரியா(20). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். இந்நிலையில், மாரியப்பன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில் புதன்கிழமை இரவும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கவிப்பிரியா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.