மறைந்த முன்னாள் அமைச்சா் பாப்பாசுந்தரம் உடல் திங்கள்கிழமை நண்பகல் தகனம் செய்யப்பட்டது.
கரூா் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பாப்பாசுந்தரம் (86), நுரையீரல் தொற்று ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் வளையப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை பாப்பாசுந்தரத்தின் உடலுக்கு கரூா் மாவட்ட அதிமுக செயலரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதையடுத்து நண்பகல் பாப்பாசுந்தரத்தின் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வளையப்பட்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, கரூா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஏ.ஆா்.காளியப்பன், கண்ணதாசன், பேங்க் நடராஜன், கமலக்கண்ணன் மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.