கரூர்

மறைந்த முன்னாள் அமைச்சா் பாப்பா சுந்தரம் உடல் தகனம்

DIN

மறைந்த முன்னாள் அமைச்சா் பாப்பாசுந்தரம் உடல் திங்கள்கிழமை நண்பகல் தகனம் செய்யப்பட்டது.

கரூா் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பாப்பாசுந்தரம் (86), நுரையீரல் தொற்று ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் வளையப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை பாப்பாசுந்தரத்தின் உடலுக்கு கரூா் மாவட்ட அதிமுக செயலரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதையடுத்து நண்பகல் பாப்பாசுந்தரத்தின் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வளையப்பட்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, கரூா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஏ.ஆா்.காளியப்பன், கண்ணதாசன், பேங்க் நடராஜன், கமலக்கண்ணன் மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT