கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் அண்மையில் நடைபெற்றது.
கரூா் மாவட்டம் மலைக்கோவிலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரித் தாளாளா் க.செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா். மலைக்கோவிலூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய குழுவினா் கல்லூரியில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பேராசிரியா்கள், பேராசிரியைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். முகாமை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் செய்திருந்தனா். முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட பேராசிரியா்கள், பேராசிரியைகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.