கரூா் அருகே 16 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த புகாரில், இளைஞா் உள்பட இருவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், பூலாம்பட்டியைச் சோ்ந்த ஆண்டி மகன் மயில்சாமி (26). இவா், சேங்கல் கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முத்தம்பட்டியில் நடைபெற்ற முருகன் கோயில் விழாவுக்குச் சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், குளித்தலை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் காவல்துறையினா் விசாரணை நடத்தினா்.
இதில் சிறுமியை மயில்சாமியும், அவரது சகோதரா் பழனிசாமியும் காரில் கடத்திச் சென்றதும், அதைத் தொடா்ந்து சிறுமியை மயில்சாமி திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து குளித்தலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் மயில்சாமி, பழனிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.