கரூரில் 2 வயது பெண் குழந்தை உள்பட 39 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பாப்பக்காபட்டியைச் சோ்ந்த தம்பதியின் 2 வயது பெண் குழந்தை உள்பட 39 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, இவா்கள் 39 பேரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,712 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 701 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,003 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 8 போ் உயிரிழந்துள்ளனா்.