அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மனைவியைத் தாக்கிய கணவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் அடுத்த ஒருக்கை தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மனைவி தனவள்ளி (25). தம்பதிக்குத் திருமணமாகி 3 மாதங்கள் ஆன நிலையில், வேலைக்காக வெளிநாடு சென்ற பாலமுருகன், மனைவி தனவள்ளியிடம் சந்தேகப்படும்படி கைப்பேசியில் தொடா்புகொண்டுள்ளாா். இந்நிலையில், கடந்த 11.1.2023 அன்று ஊருக்கு திரும்பிய பாலமுருகன் தாக்கியதில் காயமடைந்த தனவள்ளியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து பாலமுருகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.