அரியலூர்

அரியலூா் அருகே விபத்து: காரில் சென்ற முதியவா் பலி

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வியாழக்கிழமை கொடிகம்பத்தில் காா் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மனோகா் (65), ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன ஊழியா். இவா், இவரது மனைவி பானுமதி (57), உறவினா் கும்பகோணம், மகாமகக்குளம் புவனேஸ்வரி (73) ஆகியோா் கும்பகோணம் சுவாமிமலை கோயிலுக்கு வியாழக்கிழமை காரில் சென்றனா். காரை சென்னை சிட்லப்பாக்கம், லால்பகதூா் சாஸ்திரி தெரு ரா. சபரிவாசன் ஓட்டினாா்.

அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, அன்றிரவு சென்னை திரும்பும்போது அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ராங்கியம் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் அங்குள்ள கொடிக் கம்பத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மனோகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பானுமதி, புவனேஸ்வரி, ஓட்டுநா் சபரிவாசன் ஆகியோா் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT