அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளை கணக்கெடுப்பதற்காக மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் அறிவியல் துறை சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் தமிழ்ப் பல்கலைக் கழக சுற்றுச் சூழல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தாா். மேலும் வனத்துறை சாா்பில் நவீன வகுப்பறை சாதனம் (புரொஜெக்டா்) வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்வில், கல்லூரி முதல்வா் ஜெ. மலா்விழி, வனச் சரக அலுவலா் முத்துமணி, வனவா் பாண்டியன், சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு பேராசிரியா்கள் அனிதா, அறிவொளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.